http://www.islamkalvi.com
பைபிள் பெண்களை போற்றுகின்றதா? தூற்றுகின்றதா? என்கின்ற கடந்த தொடரில் பெண்களுக்கு எதிரான, பெண்களை இழிவுபடுத்தக்கூடிய பைபிளின் போதனைகளை நோக்கினோம். அதன் தொடரில்…
பொதுவாக தந்தை விட்டுச் செல்கின்ற சொத்தில் ஆணுக்கு வாரிசுரிமை வழங்குவது போன்று பெண்ணுக்கும் குறிப்பிட்ட அளவு வாரிசுரிமை வழங்குவதுதான் அறிவுபூர்வமானது. நியாயபூர்வமான சிந்தனை உள்ளவர்கள் இவ்வாறுதான் சிந்திப்பார்கள். ஆனால், கிறிஸ்த்தவர்கள் இறைவேதமாக நம்புகின்ற இறைவேதம் பின்வருமாறு கூறுகின்றது.
“மேலும் நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: ஒருவன் குமாரன் இல்லாமல் மரித்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் குமாரத்திக்குக் கொடுக்கவேண்டும்” (எண்ணாகமம் 27:8)
மேலுள்ள பைபிளின் போதனையின் அடிப்படையில், மரணித்த ஒருவருக்கு ஆண் மகன் இருந்தால் அவருடைய சொத்தில் மரணித்தவரின் மகளுக்கோ, மனைவிக்கோ அல்லது தாய்க்கோ எவ்வித உரிமையும் கிடையாது. மாறாக, ஆண் மகன் இல்லையென்றால் மாத்திரமே பெண் வாரிசுரிமை குறித்து சிந்திக்கவே முடியும். பெண்களை இழிவுபடுத்தக் கூடிய சிந்தனை உள்ளவர்களால் பைபிளில் இடைச்செருகல் செய்யப்பட்ட வசனமாகவே இது இருக்க முடியும். ஏனெனில், சர்வ வல்லமை பொருந்திய கர்த்தர் நிச்சயமாக பெண்களை இழிவுபடுத்தக் கூடிய இந்தப் போதனையை கூறியிருக்க முடியாது
இவ்வாறாக பெண்ணடிமைத்தனத்தை மதத்தின் பெயரால் ஊக்குவிக்க கூடியவர்கள் பெண்களுக்கு முறையாக வாரிசுரிமையை வழங்க கூடிய, பெண்ணுடைய சொத்தில், ஆணுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. மாறாக, அவளுக்கு பூரண சொத்துரிமை உண்டு என்கின்ற உயரிய வழிகாட்டலை வழங்கியிருக்கின்ற சத்திய இஸ்லாமிய மார்க்கத்தை பெண்களுக்கு எதிரானதாக சித்தரிக்க முற்படுவது நகைப்பிற்குரியது
உன்னத(?)ப் பாட்டு
கிறிஸ்த்தவர்களின் வேதநூலான பைபிளில் உள்ள ஆகமங்களில் ஒன்றுதான் உன்னதப்பாட்டு என்கின்ற ஆகமம். குறித்த ஆகமம் பெண்களை எவ்வாறெல்லாம் கேவலமாகவும், அசிங்கமாகவும், ஆபாசமாகவும் சித்தரிக்கின்றது என்று பார்ப்போம்.
“இளவரசியே! மிதியடியணிந்த உன் பாதங்கள் மிக அழகாயுள்ளன. உன் இடுப்பின் வளைவுகள் ஒரு தொழில் கலைஞனால் செய்யப்பட்ட நகை போன்றுள்ளது.
உன் தொப்புள் திராட்சைரசம் நிறைந்த வட்டமான கிண்ணம் போல உள்ளது. உன் வயிறானது லீலிமலர்கள் சூழ்ந்த கோதுமைக்குவியல் போன்றுள்ளது.
உன் இரு மார்பகங்களும் வெளிமானின் இரு குட்டிகள் போன்றுள்ளன.
உன் கழுத்து தந்தக் கோபுரம் போலுள்ளது. உன் கண்கள் பத்ரபீம் வாயிலருகே உள்ள எஸ்போன் குளங்கள்போல உள்ளன.
நீ மிகவும் அழகானவள். நீ மனதிற்கு மகிழ்ச்சியைத் தருபவள். நீ அன்பான, மகிழ்வளிக்கிற இளம் கன்னி.
நீ பனை மரத்தைப் போன்று உயரமானவள். உன் மார்பகங்கள் அம்மரத்தில் உள்ள கனிகளைப் போன்றுள்ளன.
நான் இம்மரத்தில் ஏற விரும்புகிறேன். இதன் கிளைகளைப் பற்றிக் கொள்வேன். இப்போது உன் மார்பகங்கள் திராட்சைக் குலைகளைப் போலவும், உன் மூக்கின் வாசனை கிச்சிலிப் பலங்கள் போலவும் இருக்கிறது.
உன்னதப்பாட்டு 7:1-7
எங்களுக்கு ஒரு சிறிய சகோதரி இருக்கிறாள் அவளது மார்பகங்கள் இன்னும் வளரவில்லை. ஒருவன் அவளை மணக்க வரும்போது எங்கள் சகோதரிக்காக நாங்கள் என்ன செய்வோம்?
அவள் ஒரு மதில் சுவராக இருந்தால் நாங்கள் அதைச்சுற்றி வெள்ளிக் கோட்டையைக் கட்டுவோம். அவள் ஒரு கதவாக இருந்தால் அவளைச் சுற்றி கேதுருமரப் பலகைகளை இணைப்போம். அவள் சகோதரர்களுக்குப் பதில் கூறுகிறாள்.
நான் ஒரு சுவர். எனது மார்பகங்களே என்னுடைய கோபுரங்கள். அவர் என்னில் திருப்தி அடைகிறார்.
உன்னதப்பாட்டு 8:8-10
உன் இரண்டு மார்பகங்களும் லீலி மலர்களை மேயும் வெளிமானின் இரட்டைக் குட்டிகளைப் போலுள்ளன. (4 :5)
உன்னதப்பாட்டு 4:5
நான் என் ஆடையைக் கழற்றிப்போட்டேன். நான் அதனை மீண்டும் அணிந்துக்கொள்ள விரும்பவில்லை.
உன்னதப்பாட்டு 5:3
என் வஸ்திரத்தைக் கழற்றிப் போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்.
என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாய் நீட்டினார். அப்பொழுது என் உள்ளம் அவர் நிமித்தம் பொங்கினது.
என் நேசருக்குக் கதவைத்திறக்க நான் எழுந்தேன்; பூட்டின கைப்பிடிகளில் மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும், என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது.
உன்னதப்பாட்டு 5:3-5
கிறிஸ்த்தவ அன்பர்களே! நீங்கள் உங்களது சிந்தனைக்கு இட்டுள்ள திரையை சற்று அகற்றி நடுநிலையாக சற்று சிந்தித்துப் பாருங்கள். உலகில் பெரும்பாலான மக்களால் இறைவேதமாக நம்பப்படுகின்ற நூலில் பெண்கள் எவ்வளவு ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். பைபிளின் இந்த பெண்களுக்கெதிரான போதனைகள் ஒரு மனிதனுக்கு நல்வழிகாட்டுமா? அல்லது வழிதவறச் செய்யுமா? இந்த உன்னதப்பாட்டை ஒரு தாயும் மகனும், தந்தையும் மகளும் ஒன்றாய் அமர்ந்து பக்திப்பரவசத்தோடு படிக்க முடியமா? நிச்சயமாக இது பெண்களை ஆபாசப் பொருளாக கருதுகின்றவர்களால் பைபிளில் இடைச்செருகல் செய்யப்பட்ட வசனமாகவே இருக்க முடியும். சிந்தியுங்கள்!
கேவலப்படுத்தப்படும் மருமகள்கள்
பைபிளின் போதனை (?) அடிப்படையில் யூதா என்பவரின் மருமகள் தாமார் என்பவள்.
தனது மூத்த மகன் ஏர் இறந்துவிட இரண்டாவது மகன் ஓனான் திருமணம் செய்து வைக்கப்படுகின்றான். அவனும் இறந்துவிட தனது இளைய மகன் சேலா என்பவனைத் திருமணம் செய்து தருவதாக ஏமாற்றுகிறார் தாவீது. இதனால் மருமகள் தாமார் மாமானார் தாவீதுடன் திட்டமிட்டு தவறான உறவு வைத்ததாக பைபிள் சித்தரிக்கிறது.
“சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம் பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து, அந்த வழியாய் அவளிடத்தில்போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான். அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள். அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்கவேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான். அவள் அவனாலே கர்ப்பவதியாகி, எழுந்துபோய், தன் முக்காட்டைக் களைந்து, தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டாள். ஆதியாகமம் 38:14-19
மேலுள்ள ஆபாசமான, பெண்களை கேவலப்படுத்தக் கூடிய மருமகளை மாமனாருடன் திட்டமிட்டு தவறான உறவு வைத்துக் கொள்ளக் கூடியவளாக சித்தரிப்பதன் மூலம் பைபிள் என்ன சொல்லவருகின்றது. இது பெண்களை இழிவுபடுத்துகின்ற நோக்கத்தில் பைபிள் எழுத்தாளர்களால் இட்டுக்கட்டப்பட்ட சமபவமேயன்றி வேறில்லை.
ஏனெனில், இந்த விபச்சாரகர்களின் சந்ததியிலேயே இயேசு வந்ததாக பைபிள் குறிப்பிடுகின்றது. பார்க்க: மத்தேயு 1:3
மேலும், பைபிள் கூறுகின்றது.
“வேசிப்பிள்ளையும் (விபச்சார சந்ததிகள்) கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது, அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது” – உபாகமம் 23:2,3
ஒன்று, கிறிஸ்த்தவ அன்பர்கள் “மருமகள் மாமனாருடன் திட்டமிட்டு தவறான உறவு வைத்துக் கொண்டதாக” பைபிள் கூறக்கூடிய சம்பவம் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இட்டுக்கட்டப்பட்டது, இடைச்செருகல் செய்யப்பட்டது என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும்.
அல்லது விபச்சார சந்ததில் தோன்றிய இயேசு கிறிஸ்த்து உபாகமம் 23:2,3 பைபிள் வசனத்தின் அடிப்டையில் கர்தரின் சபைக்குள் நுழைய முடியாது, பரிசுத்தராக முடியாது என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும். இயேசுவே பைபிள் நம்பிக்கையடிப்படையில் பரிசுத்தராக முடியாது எனும் போது இயேசுவைப் பற்றி எழுதியதாக நம்பப்படும் புதிய ஏற்பாடு எப்படி இறைவேதமாகும்? கிறிஸ்த்தவ அன்பர்கள் சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றார்கள்
மானபங்கப்படுத்தப்படும் பெண்ணினம்
பைபிள் “ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு” (மத்தேயு 1:1) என்று அறிமுகப்படுத்துகின்ற அளவு, பைபிளின் கதாநாயகரான இயேசுவுக்கே முகவரி கொடுக்கும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்ற தீர்க்கதரிசியாக “தாவீது” என்பவர் தனது போர்ப்படையில் தனக்கு விசுவாசமாக சேவகம் புரிந்து வந்த “உரியா” என்கின்ற போர்வீரனின் மனைவியோடு திட்டமிட்டு சூழ்ச்சியாக தவறான உறவு கொள்வதோடு உரியாவை நயவஞ்சகத்தனமாக சாகடித்தும்விடுகின்றார்.
(2 சாமுவேல் 11: 12-17)
இது கர்த்தருக்கு பிடிக்காததால், கர்த்தர் தாவீதை எவ்வாறு தண்டித்தார் என்பதை பைபிள் விபரிக்கின்றது.
“கர்த்தர் சொல்கிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன், அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான். நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய், நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான்”
(2 சாமுவேல் 12: 11 – 12)
தந்தை செய்த விபச்சாரத்திற்கு தண்டனையாக “பெண்பிள்ளைகள்” மக்கள் மன்றத்தில் கற்பழிக்கப்படுவார்கள் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்? நமது அறிவுக்குப் பிழை என்று தோன்றுகின்ற, நியாயபூர்வமான சிந்தனை உள்ள யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத இந்த தண்டனையை கர்த்தர் நிச்சயமாக கூறியிருக்கமாட்டார். மாறாக, பெண்களை ஆன்மா அற்ற போகப்பொருளாக கருதியவர்களால் பெண்களை இழிவுபடுத்தும் நோக்குடன் பைபிளில் இடைச் செருகல் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஏனெனில், கிறிஸ்த்தவர்களால் கர்த்தரின் வார்த்தைகள் என்று நம்பப்படும் பைபிள் கூறுகின்றது.
“பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் ராஜாவினுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்”
எசக்கியேல் 18:20
குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதில்லை என்கின்ற எசக்கியேல் 18:20 அதிகாரத்தின் போதனைகளை கிறிஸ்த்தவ அன்பர்கள் விசுவாசிப்பார்களானால், தந்தை செய்த விபச்சாரத்திற்கு தண்டனையாக பெண்பிள்ளைகள் மக்கள் மன்றத்தில் கற்பழிக்கப்படுவார்கள் என்கின்ற போதனை பெண்களை போகப்பொருளாக கருதியவர்களால் இடைச்செருகல் செய்யப்பட்டது என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும்.
எனவே, நாம் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு பைபிளை ஆய்வுக்குட்படுத்திப் பார்ப்போமானால், பைபிளில் பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் நிறைந்து காணப்படுவதை அவதானிக்கலாம்
பெண்கள் அசிங்கமாக, ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதை, பெண்கள் இழிவு படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.
பைபிள் கூறுகின்றது.
16. வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி,
17. அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும், பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
அல்லாஹ் நாடினால் பைபபிளின் போதனைகள் வெளிக்கொணரப்படும்.